#WATCH: Scuffle broke out between alleged supporters of wrestlers Sushil Kumar and Parveen Rana at K. D. Jadhav Stadium in Delhi; reason not yet ascertained pic.twitter.com/sigLOa3koY
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் மல்யுத்தப் போட்டிகளில் பங்குபெறும் வீரர்களுக்கான தேர்வு டெல்லியில் நடைபெற்றது.
இந்தத் தேர்வில் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று தந்த சுஷில் குமார் 74 கிலோ எடை பிரிவில் தகுதி பெற்றுள்ளார். இவரைத் தவிர ராகுல் அவரே (57கி), பஜ்ராங் (65கி), சோம்வீர் (86கி), மவுஷம் கதிர் (97கி) மற்றும் சுமித் (125கி) ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வீரர்கள் தேர்வின்போது, சுஷில்குமாரின் எதிரியாக கருதப்படும் சகப் போட்டியாளர் பிரவீன் ராணாவை, சுஷில்குமாரின் ஆதரவாளர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், வீரர்கள் தேர்வில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, சுஷில் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ராணாவைத் தாக்கியதாக டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Mobile AppDownload Get Updated News