ரியாத்: உலக பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உலக பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் ரேபிட் செஸ் என்ற அதிவேகமாக காய்களை நகர்த்தும் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.
இத்தொடர்ந்து பிலிட்ஸ் போட்டி தொடங்கியது. 21 சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டியில் 9 வெற்றி, 12 ‘டிரா’, 1 தோல்வியைச் சந்தித்தார் ஆனந்த். இறுதியில் மொத்தம் 14.5 புள்ளிகள் பெற்றிருந்த அவர் ரஷ்ய வீரர் கர்ஜாகின் உடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டார்.
இப்போட்டியில் நார்வே நாட்டைச் சேர்ந்த உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் 16 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றார்.
Mobile AppDownload Get Updated News