Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன் ஆனார் விஸ்வநாதன் ஆனந்த்!

$
0
0

இந்தியாவின் முன்னிலை செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் உலக ரேபிட் சாம்பியன்ஷிப் பட்டத்தை 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வென்றுள்ளார்.

உலக செஸ் ரேபிட் சாம்பியன்ஷிப் போட்டிகள் சவூதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் நடைபெற்றன. இதில் முன்னாள் சாம்பியனான இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், பெட்டோசோவை இறுதிபோட்டியில் 2-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்று மீண்டும் உலக சாம்பியனாகி உள்ளார்.

வெற்றி பற்றி தெரிவித்த விஸ்வநாதன் ஆனந்த், ‘அற்புதமான ஆச்சர்யம்’ என்று தெரிவித்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டிற்குப் பிறகு, 14 ஆண்டுகள் கழித்து விஸ்வநாதன் ஆனந்த் இந்தப் பட்டத்தை மீண்டும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>