Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

சி.ஆர்.பி.எப்., படைத் தலைவராகிறார் சிந்து!

$
0
0

புதுடில்லி: மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையின் (சி.ஆர்.பி.எப்.,) கௌரவ படைத் தலைவராக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நியமிக்கப்படவுள்ளார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது. இதில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார். இதையடுத்து இவரது வெற்றி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவருக்கு மேலும் ஒரு கௌவுரமாக சி.ஆர்.பி.எப்.,பின் தூதுவராகவும், கௌவுரவ கமாண்டோவாகவும் சிந்து நியமிக்கப்படவுள்ளார். இதற்காக உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்காக சி.ஆர்.பி.எப்., காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி கிடைத்தவுடன் சிந்துவுக்கு முறைப்படி சீருடை, பேட்ஜ் உள்ளிட்டவைகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிந்துவின் நியமனம் நாட்டின் பெண்கள் முன்னேற்றத்துக்கு முக்கியபங்காக விளங்கும் என சி.ஆர்.பி.எப்., நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles