Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

பொய்யான தகவல் ரயில்வே விளக்கம்!

$
0
0

புதுடில்லி: ரியோவில் இருந்து நாடுதிரும்பிய இந்திய பெண்கள் அணியை கீழே அமரச்சொன்னதாக வெளியாக தகவல் பொய்யானது என இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்று நாடு திரும்பிய இந்திய பெண்கள் அணி வீராங்கனைகள், ரயிலில் பயணம் செய்த போது தரையில் அமர்ந்து பயணம் செய்ததாக தகவல்கள் வெளியானது. இது தவறான தகவல் எனவும், இதை நம்பவேண்டாம் என இந்தியவே இன்று விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து இந்திய ரயில்வேத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ' ரியோவில் இருந்து தாயகம் திரும்பி, ராஞ்சியில் இருந்து ரோர்கெலா வரை பயணம் செய்த இந்திய ஹாக்கி வீராங்கனைகளை, ரயில்வே டிடி., தரையில் அமர சொன்னதாக வெளியான தகவலில் உண்மையில்லை. வீராங்கனைகள் தங்களது உறுதி செய்யப்படாத பயணச்சீட்டுடன் ரயிலில் ஏறியுள்ளனர். இதனால் அவர்களுக்கு சீட் கொடுக்க டிடி.,க்கு 20 நிமிடம் தேவைப்பட்டுள்ளது. தவிர, வீட்டுக்கு சென்று தங்களது உறவுகளை பார்க்க அதிக ஆவலுடன் இருந்ததால் தான் இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம்.' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>