Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

பிவி சிந்து, மாலிக்கிற்கு ஜனாதிபதி வழங்கிய கேள் ரத்னா விருது!!

$
0
0

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு தேசிய விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று வழங்கினார்.

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த விழாவில் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற பிவி சிந்து, சாக்ஷி மாலிக் மற்றும் திபா கர்மாகர் ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேள் ரத்னா விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். மேலும், 15 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

ரியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பிவி சிந்து, ஜிம்னாஸ்டிக் போட்டியில் 4வது இடம் பெற்ற திபா கர்மாகர், துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று இருந்த ஜிட்டு ராய், மல்யுத்தப் போட்டியில் பங்கேற்று வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேள் ரத்னா விருது வழங்கப்பட்டது.


அத்லெட் பயிற்சியாளர் நாகபுரி ரமேஷ், விராட் கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார், திபா கர்மாகர் ஆகியோருக்கு துரோணாச்சாரியா விருது வழங்கப்பட்டது.

நீச்சல் வீரர் எஸ். பிரதீப் குமார், மல்யுத்தப் போட்டிக்கு ஆற்றி வந்த சேவைக்காக மகாவீர் சிங் இருவருக்கும் வாழ்நாள் விருது வழங்கப்பட்டது.

வில் வித்தையில் ரஜத் சவுகான், அத்லெட் லலிதா பாபர், பில்லியர்ட்ஸ் அண்டு ஸ்னூக்கர் சவுரவ் கோதாரி, குத்துச் சண்டை சிவா தாபா, கால்பந்து வீரர் சுப்ரதா பால், ஹாக்கி வீரர் வி.ஆர். ரகுநாதன் மற்றும் ராணி, துப்பாக்கி சுடும் வீரர் குன்பிரீத் சிங், அபுர்வி சாண்டேலா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

மல்யுத்த போட்டியின்போது காயமடைந்த வீரர் வினேஷ் போகட்டுக்கும் விருது வழங்கப்பட்டது.

சில்வனஸ் டங் டங், ராஜேந்திர பிரஹலாத் ஷேல்கேவுக்கு தயாந்த் சந்த் விருது வழங்கப்பட்டன.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>