Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

பிரீமியர் லீக்: மே மாதத்திலிருந்து மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி!

$
0
0


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ரசிகர்கள் இல்லாமல் கால்பந்து ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் நடப்பு சீசனில் இரண்டு வாரங்களுக்கு 10,000 முதல் 15,000 ரசிகர்களை மட்டுமே அனுமதித்து போட்டிகள் நடைபெற்றன ஆனால் அதன் பின் மீண்டும் பரவல் அதிகரிக்கத் துவங்கியதால் ரசிகர்களுக்கு மைதானங்கள் மூடப்பட்டன.

கால் பந்து ஆட்டத்தில் ரசிகர்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றனர். குறிப்பாக சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் நாக்- அவுட் சுற்று இரண்டு ஆட்டங்களாக நடைபெறும், அதில் ஒருவேளை இரண்டு ஆட்டங்களையும் சேர்த்து ஆட்டம் டிராவில் முடிந்தால் எதிரணியின் மைதானத்தில் யார் அதிக கோல் பதிவு செய்துள்ளார்களோ அவர்களே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாத பட்சத்தில் இந்த முறை பின்பற்றுவதற்கான அடிப்படையே தகர்ந்து விடும். ஏனெனில் எதிரணியின் மைதானத்தில் விளையாடுவதை கடினம் ஆக்குவதே ரசிகர்கள்தான் உதாரணத்திற்கு மான்செஸ்டர் யுனைடெட் அணியும் லிவர்பூல் அணியும் மோதுகின்ற ஆட்டம் லிவர்பூல் அணியின் சொந்தமான அன்பீல்ட் மைதானத்தில் நடைபெறுகிறது என்றால் அதில் 3/4 பங்கு லிவர்பூல் அணியின் ரசிகர்கள் இருப்பார்கள்.

எனவே ரசிகர்களின் ஆரவாரம் லிவர்பூல் அணியின் வீரர்களுக்கு மிகப் பெரிய உந்துதலாக செயல்படும். தற்பொழுது ரசிகர்கள் அனுமதிக்கப்படாத காரணத்தால் எதிரணியின் மைதானமாக இருந்தாலும் சொந்தமாக இருந்தாலும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக லிவர்பூல் அணி விளங்குகிறது, லிவர்பூல் அணியின் சொந்தமான அன்பீல்ட் மைதானம் பேர் போன ஒன்று, காரணம் லிவர்பூல் ரசிகர்களின் ஆரவாரத்தால் லிவர்பூல் அணியை வீழ்த்துவது மிகக் கடினமான ஒன்றாக ஆகிவிடும்.

மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாத இந்த சமயத்தில் லிவர்பூல் அணி தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. லிவர்பூல் அணியின் வரலாற்றில் முதல் முறையாக சொந்த மைதானத்தில் 6 முறை தொடர்ச்சியாக தோல்வியடைகிறது.

கால்பந்து ஆட்டம் ரசிகர்கள் இல்லாமல் கால்பந்து ஆட்டமாகவே இல்லை என்று கால்பந்தாட்ட காரர்களும் அணியின் மேலாளர்களும் கூறி வந்த நிலையில் தற்போது இங்கிலாந்து நாட்டில் மே மாதம் 17ம் தேதி முதல் மைதானத்திற்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனவே புதிய சீசனின் துவக்கத்திலிருந்து ரசிகர்கள் மீண்டும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற செய்தி ரசிகர்களையும் அணியின் வீரர்களையும் மேலாளர்களின் ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>