சென்ற புதன்கிழமை டோட்டன்ஹாம் மற்றும் ஃபுல்ஹாம் அணிகள் மோதிய ஆட்டத்தில் ஃபுல்ஹாம் அணியின் மாஜா கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்தார். ஆனால் அவர் கோல் அடிப்பதற்கு சற்றுமுன் அணியின் லெமினா கையில் பந்து தவறி பட்டதால் அந்த கோல் நிராகரிக்கப்பட்டது, அவரை அறியாமல் பந்து அவரின் கையின் மேல் பட்டதாக லெமினா நடுவரிடம் வாதிட்ட போதிலும் ஃபுல்ஹாம் அணிக்கு கோல் கொடுக்கப்படவில்லை.
இதையடுத்து ஐ.எஃப்.ஏ.பி. ஹேன்ட் பால் சட்டத்தில் பல மாற்றங்களை அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.எஃப்.பி.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், பந்து வீரரின் கையில் அவரை அறியாமல் பட்டால் அது ஃபவுலாக வழங்கப்படாது என்றும் கைகள் உடலை ஒட்டி இருக்கும் பொழுது ஒருவரின் கைகளில் பட்டால் அதுவும் ஃபவுலாக வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்பொழுது இங்கிலாந்து நாட்டின் பிரீமியர் லீக்கில் புதிதாய் கொண்டுவரப்பட்டுள்ள மூளை அதிர்வு காரமான சப்ஸ்ட்டிடியூஷனை பற்றி மருத்துவ குழுக்களோடு இணைந்து விரைவில் அதற்கு ஒரு சட்டம் இயற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் வீஏஆர் மீது வைக்கப்படும் மற்றொரு விமர்சனமாக ஆஃப் சைடை பற்றி விரைவில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். மேலும் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மற்றும் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்கள் வருகின்ற ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Mobile AppDownload Get Updated News