சவுத்தம்ப்டன் மற்றும் சுரூஸ்பெரி இடையிலான மூன்றாம் சுற்று முடிவு பெறாத நிலையில், அதில் வெற்றி பெறும் அணி ஆர்செனலுடன் நான்காம் சுற்றில் மோதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சிறிய அணிகளுடனேயே கோப்பைகளில் விளையாடுகிறது என்று விமர்சிக்கப்படும் மான்செஸ்டர் சிட்டி அணி, இந்த முறை நான்காம் நிலை அணியான செல்டென்ஹாம் அணியுடன் மோத உள்ளது.
மான்செஸ்டர் சிட்டி ரசிகர்கள் இதை கொண்டாட பிற அணி ரசிகர்கள் மீண்டும் இதை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். மூன்றாம் சுற்றில் நான்காம் நிலை அணியுடன் வெற்றி பெற்ற செல்சீ அணி இம்முறை இரண்டாம் நிலை அணியான லுடன் டவுனுடன் மோதுகிறது.
சென்ற சுற்றில் எட்டாம் நிலை அணியான மெரினுடன் மோதியது டோட்டன்ஹாம். இம்முறை இரண்டாம் நிலை அணியான வைகொம் வாண்டரர்ஸ் அணியுடன் மோதுகிறது. நாட்டில் இருக்கும் சிறிய அணிகளுக்கு இது போன்று பெரிய அணிகளுடன் விளையாடும் வாய்ப்பை எஃப்.ஏ கோப்பை அமைத்து தருகிறது.
இதுதான் எஃப்.ஏ கோப்பையின் மகிமை என்று பலர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எஃப்.ஏ கோப்பையின் நான்காம் சுற்று ஜனவரி மாதம் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Mobile AppDownload Get Updated News