Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஆதிக்கம் செலுத்திய மும்பை.. கோபமடைந்த மோகன் பேகன்.. தள்ளுமுள்ளில் முடிந்த ஆட்டம்!

$
0
0

நடப்பாண்டு இந்தியன் சூப்பர் லீகின் 55வது ஆட்டம் இன்றிரவு நடைபெற்றது. இதில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணியான மும்பை சிட்டி எஃப்.சி அணியும் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அத்லடிகொ டி கொல்கத்தா மோகன் பேகன் அணியும் மோதின.

முதலாம் அணியும் இரண்டாம் அணியும் மோதினால் அது எப்பொழுதும் சுவாரசியமான ஒன்று தான், இந்த ஆட்டமும் சலைத்தது அல்ல, ஆட்டத்தின் முதல் பாதியில் மும்பை அணி கடுமையாக ஆதிக்கம் செலுத்தியது ,இதனால் மோகன் பேகன் அணியால் முதல் பாதியில் கோலை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்க முடியாமல் போனது. முதல் பாதியில் பெரிய அளவில் வாய்ப்புகளை மும்பை உருவாக்காத நிலையில் 0-0 என்ற கோல் கணக்கில் முதல் பாதி முடிந்தது.

இரண்டாம் பாதி ஏதோ வேறொரு ஆட்டத்தை போல அமைந்தது, இரு அணிகளும் மாறிமாறி வாய்ப்புகளை உருவாக்க ஆட்டம் சூடுபிடிக்க துவங்கியது. மும்பை அணி பந்தை தன்வசம் வைத்துக்கொண்டு எதிரணி விளையாட குறைவான நேரமே கொடுத்தனர். தொடர்ந்து நிதானம் காட்டிய மும்பை அணிக்கு 69வது நிமிடத்தில் ஒரு கோல் கிடைத்தது, பூமஸ் கொடுத்த பந்தை சிறப்பான முறையில் ஒக்பெசி சுழற்றி விட்டு கோலாக மாற்றினார்.

முதல் பாதியை போல் இல்லாமல் இரண்டாம் பாதியில் மோகன் பேகன் அணி பல வாய்ப்புகளை உருவாக்கியது, இருப்பினும் எதையும் கோலாக மாற்ற முடியாமல் போனது. ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் மும்பை அணியின் நிதான ஆட்டம் எதிரணியை கடுப்பேத்தியது, இதனால் ஆட்டத்தில் பல வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆட்டம் முடிவடைந்ததும் இரு அணிகளுக்கு இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மும்பை அணிக்காக கோல் அடித்து வெற்றி பெற செய்த ஒக்பெசி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

உலகின் மிக வயதான கால்பந்து வீரர் மேலும் ஒராண்டு விளையாட ஒப்பந்தம்!

லீகில் அனைத்து அணிகளும் தலா 10 ஆட்டங்கள் ஆடிய நிலையில், இன்னும் சரியாக அணிக்கு தலா 10 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. 50%ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் மும்பை அணி 25 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது அதை தொடர்ந்து மோகன் பேகன் அணி 20 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>