உதாரணத்திற்கு 35 வயதான ரொனால்டோ இன்னும் தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் மற்றும் 39 வயதாகும் இப்ராஹிமோவிசை கோலடிக்காமல் தடுக்க தடுப்பட்டகாரர்கள் போராடிவருகின்றனர். இவர்களை போல் வெகு சில வீரர்கள் மாத்திரம் தங்களது 35 வயதிற்கு மேல் தொடர்ந்து விளையாடுவர். 40 வயதிர்க்கு மேல் ஓரிரு வீரர்கள் மாத்திரம் கால்பந்து ஆட்டத்தை தொடர்வார்கள். உதாரணத்திற்கு புஃபான், 42 வயதில் யுவெண்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
அவரும் ஒரு கோல் கீப்பர் என்பதால் வயதானாலும் பெரிய அளவில் அவரது ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்தாது. இதன் மத்தியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த யொகொஹாமா எஃப்.சி அணிக்காக விளையாடி வரும் கசுயோஷி முய்ராவிர்க்கு 53 வயது ஆகிறது. 90களில் மூன்று முறை ஜே-லீகில் (J-League) கோல்டன் பூட் (சீசனின் அதிக கோல் அடித்த வீரருக்கு வழங்கப்படுவது) வென்றுள்ளார்.
ஜப்பானில் மட்டும் அல்ல, இத்தாலி, பிரேசில், ஆஸ்திரேலிய என பல நாடுகளில் இவர் விளையாடியுள்ளார். இந்த ஆண்டு ஓய்வை அறிவிப்பார், அடுத்த ஆண்டு ஓய்வை அறிவிப்பார் என்று ஆண்டு தோறும் கிசுகிசுக்கள் வந்த பட்சத்தில் இன்று யொகொஹாமா எஃப்.சி அணிக்காக விளையாட மேலும் ஒராண்டு ஒப்பந்தம் செய்துள்ளார்.
'எனக்கும் கசுயோஷி முய்ரா போல் 52 வயது வரையில் விளையாட ஆசைதான். கால்பந்து ஆட்டத்தில் அவருக்கு இருக்கும் வேட்க்கை அற்புதமானது' என்று முன்னாள் பார்சிலோனா வீரரான இணியேஸ்டா, கசுயோஷி முய்ராவை பற்றி அவர் ஜே-லீகில் இணையும்போது கூறினார்.
இணியெஸ்டாவை போலவே பலர் கசுயோஷி முய்ராவிர்க்கு கால்பந்தின் மேல் இருக்கும் வேட்க்கையை கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர். கசுயோஷி முய்ராவிர்க்கு கால்பந்தின் மேல் இருக்கும் காதல் இன்று பலரது வாழ்த்தையும் பாராட்டுக்களையும் பெற்று தந்துள்ளது.
Mobile AppDownload Get Updated News