இந்தியாவில் வரும் 7ம் தேதி முதல் 22ம் தேதிவரை உலகக்கோப்பை கபடிப்போட்டிகள் நடக்கவுள்ளது. இதில் 12 அணிகள் மோதவுள்ளன. இந்தியா, பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடப்பதால், அதிக பதட்டம் நிலவுகிறது.
இதனால் பாகிஸ்தான் அணி, இத்தொடரில் பங்கேற்காது என சர்வதேச கபடி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச கபடி கூட்டமைப்பு தலைவர் தியோராஜ் சதுர்வேதி கூறுகையில்,’ சர்வதேச கபடி கூட்டமைப்பின் மதிப்பிற்குரிய உறுப்பினர் பாகிஸ்தான் அணி. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அதனால் இருநாடுகளின் நலனே மிகவும் முக்கியம். அதனால் இந்த தொடரை பாகிஸ்தான் அணி, புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. என்றார்
Mobile AppDownload Get Updated News