ரஷ்யாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரோபாவா. இவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக ,இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தான் தெரியாமல் அதை பயன்படுத்தியதாகவும், அதனால் தனது தண்டனையை குறைக்கும்படி, மேல்முறையீடு செய்திருந்தார்.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையின் போது ஷரபோவாவின் மீது உள்ள நியாங்கள் எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட தடை காலமான இரண்டு ஆண்டுகளுக்கு பதில், 15 மாதங்கள் தடையை குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள அவர் தனது ரசிகர்களுடன் பேஸ்புக் மூலம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியது,’ டென்னிஸ் தான் எனது பேஷன், அதை இத்தனை நாட்கள் மிஸ் செய்தேன். தற்போது மீண்டும் களமிறங்க நாட்களை எண்ணிக்கொண்டுள்ளேன். இனிமேலும் என்னால் காத்திருக்க முடியாது. விரைவில் மீண்டும் வருவேன்,’ என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Mobile AppDownload Get Updated News