சீனாவில் வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்பரா ஜோடி, சீன தைபேவின் ஹாவ் சிங் சாங், யுங் ஜான் சான் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் துவக்கம் முதல் சானியா ஜோடியின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. முதல் செட்டை 6-4 என வென்ற சானியா ஜோடி, இரண்டாவது செட்டை 3-6 என கோட்டைவிட்டது. வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் அசத்திய சானியா ஜோடி, 10-7 என தன் வசப்படுத்தியது.
முடிவில், இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்பரா ஜோடி, சீன தைபேவின் ஹாவ் சிங் சாங், யுங் ஜான் சான் ஜோடியை 6-4, 3-6, 10-7 என்ற செட்களில் வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது.
Mobile AppDownload Get Updated News