Humbled to stand next to you. Well done on your incredible achievements. The best I’m sure is yet to come. Good lu… https://t.co/2f88iS8kbK
2014 மற்றும் 2018 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளில், பளு தூக்கும் பிரிவில் இந்தியா சார்பாக பங்கேற்ற தமிழக வீரர் சதீஸ் சிவலிங்கம் தங்கம் வென்று சாதனைப் படைத்தார்.
இந்நிலையில், சதீஸ் முன்னாள் இலங்கை வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்ககராவை விமான நிலையத்தில் சந்தித்து, அவருடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அந்தப் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சதீஸ், சங்ககராவை சந்தித்து மகிழ்ச்சியாக இருந்ததாகவும், அவர் தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் தெரிந்துகொண்டதாக கூறியது மகிழ்ச்சியான தருணம் என்றும் பதிவிட்டார்.
இந்தப் பதிவிற்கு பதிலளித்த குமார் சங்ககரா, “உங்கள் அருகில் நிற்பது பெருமையாக உள்ளது. உங்களின் அற்புதமான சாதனைகளுக்கு வாழ்த்துகள். இனி தான் உங்களின் திறமையை நீங்கள் வெளிப்படுத்த போகிறீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக வீரரின் திறமையை மனம் திறந்து பாராட்டிய குமார் சங்ககராவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகின்றது.
Mobile AppDownload Get Updated News