இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து துபாய் உலக சூப்பர் சீரிஸ் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இந்திய பேட்மிண்டன் விளையாட்டில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் பிவி சிந்து. துபாய் உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, ஜப்பானின் யமாகுசியை எதிர்கொண்டார். இந்த போட்டியில் சிந்து 21-9, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இன்று நடக்கும் இதன் இறுதிப் போட்டியில் சீனாவின் சென் யுஃபியை எதிர்கொள்ள உள்ளார்.
Mobile AppDownload Get Updated News