Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

மெஸ்ஸி, நெய்மர் மற்றும் ரொனால்டோவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல்!

$
0
0

உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்களான மெஸ்ஸி, நெய்மர் மற்றும் ரொனால்டோ ஆகியோருக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் கால்பந்தாட்ட ரசிகர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஐஎஸ் அமைப்பைத் தொடர்ந்து ரஷ்யா எதிர்த்து வருவதால், ஐஎஸ் தீவிரவாதிகள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து, உலகின் முன்னணி வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோ மற்றும் நெய்மர் ஆகியோரை சிறைப்பிடித்து கொலை செய்வது போன்ற படங்களை உருவாக்கி, இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

மேலும், உலககோப்பை நடக்கும் மைதானங்களில் தாக்குதல் நடத்தப்போவதாகவும் எச்சரித்துள்ளனர். இதனால் கால்பந்தாட்ட ரசிகர்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

ISIS terrorists threatened to kill Football players Messi, Ronaldo and Neymar.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>