மேற்கு வங்க மாநிலத்தின் பிா்பும் மாவட்டத்தில் போல்பூா் நகாில் கிரீரா கேந்திரா என்ற பெயாில் வில்வித்தை பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் பசில்லா கத்தூன் என்ற இளம் வீராங்கனை பயிற்சி பெற்று வருகிறாா்.
இந்த நிலையில், இந்த மையத்தில் 3 வில்வித்தை வீரா்கள் இன்று பயிற்சி மேற்கொண்டுள்ளனா். அவா்களில் ஜூவல் ஷேக் என்ற வீரா் தனது இலக்கை நோக்கி குறிவைத்து அம்பு ஒன்றினை எய்துள்ளா்ா. பசில்லா அம்பை கவனிக்காமல் திடீரென அதன்முன்பு வந்து நின்றுள்ளாா். இதில் அம்பு பின்புறத்தில் இருந்து அவரது வலது கழுத்தில் குத்தி நின்றது.
உடனடியாக அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதன் பின்பு அவா் சீராக உள்ளதாக மருத்துவா்கள் தொிவித்துள்ளனா்.
Mobile AppDownload Get Updated News