புரோ கபடி லீக் போட்டியின் சென்னை சுற்று ஆட்டங்கள் நடக்கிறது. ஐந்தாவது புரோ கபடி லீக் போட்டிகள் இந்தியாவின் 12 நகரங்களில் நடக்கிறது. இதில் சென்னையில் நடக்கும் லீக் சுற்று போட்டிகள் தற்போது நடக்கிறது.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, உ.பி.யோதா அணியை எதிர்கொண்டது.
சொந்த மண்ணில் முதல் வெற்றியை நோக்கி களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி 15-20 என முதல் பாதியிலேயே 5 புள்ளிகள் பின் தங்கியது.
தொடர்ந்து பரபரப்பாக துவங்கிய இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் புள்ளிகள் பெற கடினமாக போராடினர். ஒருகட்டத்தில் 26-33 என உ.பி. யோதா அணி முன்னிலை பெற்றது. கடைசி வரை தமிழ் தலைவாஸ் அணியால் உ.பி.யோதா., அணியின் முன்னிலையை எட்டிப்பிடிக்க முடியவில்லை.
இரண்டாவது பாதியின் முடிவில், தமிழ் தலைவாஸ் அணி 33-37 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை சந்தித்தது.
Mobile AppDownload Get Updated News