தமிழ்நாடு தடகள சங்கம் சார்பாக 57வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் சென்னையில் நடக்கிறது. இது நாளை மறுநாள் (25ம்தேதி) துவங்கி வரும் 28ம்தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
இதில் இந்தியா முழுதும் பல மாநிலங்களை சேர்ந்த 1,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து 41 வீரர்களும், 35 வீராங்கனைகளும் என மொத்தமாக 76 பேர் பங்கேற்கிறார்கள்.
இந்த சாம்பியன்ஷிப்பில் 47 பிரிவுகளில் போட்டிகள் நடக்கும்.
இப்போட்டியை ஜி.எஸ்.டி, கலால் துறை தலைமை கமிஷனர் சி.பி.ராவ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு உறுப்பினர் செயலாளர் ரீதா ஹரீஷ் தாக்கூர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு துவங்கி வைக்கவுள்ளனர்.
57th National Inter State Senior Athletics Championships 2017 | AFI
Mobile AppDownload Get Updated News