உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த சம்பத் பரத்வாஜ் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சூடு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது 14வது வயதில் இந்திய டபுள் ட்ராப் துப்பாக்கிச் சூடு அணியில் இடம்பிடித்தபோது அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் பரத்வாஜ்.
பின்லாந்தில் கடந்த ஜூலையில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் ஷாட்கன் கோப்பை போட்டியில் பங்கேற்ற பரத்வாஜ் 150க்கு 137 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
இந்தியாவின் ஒலிம்பிக் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக உருவாகியுள்ள பரத்வாஜ் தற்போது அடுத்த மாதம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை இறுதிச் சுற்று போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார். டபுள் டிராப் பிரிவில் அன்கூர் மிட்டல், சங்ராம் தாஹியா ஆகியோருடன் அவர் பங்கேற்பார்.
Mobile AppDownload Get Updated News