லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் பெல்ஜியத்தின் பிலிப்கென்ஸ் இணை இங்கிலாந்தின் நவோமி பிராடி மற்றும் ஹீதர் வாட்சன் இணையை எதிர்த்து விளையாடியது. இதில் சானியா ஜோடி 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
மேலும் ஆடவர் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா மற்றும் பிரான்ஸின் ரோஜர் வாசலின் இணையும் இந்தியாவின் புரவ் ராஜா மற்றும் திவிஜ் இணையும் மூன்றாவது சுற்றில் அடியெடுத்து வைத்துள்ளன.
உலகின் முன்னணி வீரர்களான ஜோகோவிச், ஏஞ்சலிக் கெர்பர், ராட்வன்ஸ்கா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
Mobile AppDownload Get Updated News