இந்திய பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி அண்மையில் இரு சூப்பர் சீரீஸ் பேட்மிண்டன் தொடர்களில் ஆடவர ஒன்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
முதலில் சிங்கப்பூர் சூப்பர் சீரீஸ் தொடரிலும் பின்னர் ஆஸ்திரேலிய சூப்பர் சீரீஸ் தொடரிலும் அவர் கோப்பை வென்றார். உலகின் தலைசிறந்த வீரர்களை எல்லாம் திணறடித்து மிரட்டிய அவர் அடுத்தடுத்து இரு பட்டங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்ந்துள்ளார்.
இவரைப் பாராட்டும் விதமாக ஏராளமான பரிசுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனிடையே, சர்வதேச தரவரிசை பட்டியிலில் 11வது இடத்தில் இருந்த கிடாம்பி மூன்று இடங்கள் முன்னேறி 8வது இடத்திற்கு வந்திருக்கிறார்.
Mobile AppDownload Get Updated News