ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்தும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா, பி.வி.சிந்து ஆகியோரும் களம் இறங்குகிறார்கள்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜுவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடியும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடியும் களமிறங்குகின்றனர்.
சாய்னாக்கு இந்த போட்டி வாழ்வா, சாவா ஆட்டமாக அமையலாம். அதேநேரத்தில் கடந்த ஒலிம்பிக்கோடு ஒப்பிடும்போது, உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றது, 2015-இல் தரவரிசையில் முதலிடத்தை எட்டியது என சாய்னாவின் ஆட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
உலக வாகையர் போட்டியில் பி.வி.சிந்து இரு முறை வெள்ளி வென்றுள்ளார். இது பி.வி சிந்துவிற்கு பலமாக பார்க்கபடுகிறது.
பெண்கள் இரட்டையர், ஆண்கள் இரட்டையர் பிரிவுகளைப் பொறுத்தவரையில் இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்பு மிகவும் குறைவுதான்.
Mobile AppDownload Get Updated News