நேபாளத்தில் நடந்த தெற்காசிய மகளிர் கால்பந்துத் தொடரில் இந்திய மகளிர் கால்பந்து அணி அபாரமாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதி ஆட்டத்தில் வங்க தேசத்தை எதிர்கொண்ட இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
இரு அணிகளும் சம பலத்துடன் ஆடியதால், ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரண்டு அணியும் தலா ஒரு கோல் அடித்திருந்தன. பின்னர் இரண்டாவது பாதியில் ஆக்ரோஷமாக ஆடிய இந்திய வீராங்கனைகள் இரண்டு கோல்களைப் போட்டனர். ஆனால், முதல் பாதியில் அடித்த ஒரு கோலுக்குப் பிறகு கோலை கோட்டை விட்ட வங்க தேச அணி கோப்பையையும் கோட்டை விட்டது.
தெற்காசிய மகளிர் கால்பந்துத் தொடரில் இந்திய அணி பெறும் நான்காவது சாம்பியன் பட்டம் இது என்பது பெருமிதம் கொள்ளத்தக்கது.
Mobile AppDownload Get Updated News