Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

”ஹிஜாப்” போட வற்புறுத்தியதால் இந்தியா வீராங்கனை போட்டியிலிருந்து விலகல்..!

$
0
0

ஹிஜாப் போட வலியுறுத்தியதால் ஈரானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கிச்சுடும் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை ஹீனா சித்து விலகியுள்ளார்.

ஈரான் தலைநகர் தெக்ரானில் 9-வது ஆசிய ஏர்கன் துப்பாக்கிச் சுடும் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் வீராங்கனை ஹீனா சித்து கலந்து கொள்ள இருந்தார்.

ஆனால் ஈரானை பொறுத்தவரை அந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பெண்களும்,பெண் சுற்றுலாப்பயணிகளும் ஹிஜாப் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹீனா சித்து,அந்த போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

“வெளிநாடுகளிலிருந்து ஈரானுக்கு வரும் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்பது விளையாட்டுத்துறை சார்ந்த விஷயமல்ல.அதனை நான் விரும்பவில்லை.அதனால்தான் போட்டியிலிருந்து விலகிவிட்டேன்.”என ஹீனா சித்து தெரிவித்துள்ளார்.
மேலும்,”நான் ஒரு புரட்சிப் பெண் கிடையாது.ஆனால் விளையாடும் இடத்தில் கூட ஹிஜாப் அணிய வேண்டும் என கூறுவது விளையாட்டு மனநிலையை பாதிக்கக்கூடியது.”எனவும் அவர் கூறியுள்ளார்.கடந்த 2013-ஆம் ஆண்டும் இதே சர்ச்சை காரணமாக ஈரானில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் இருந்து ஹீனா விலகினார்.

இந்தியாவின் சார்பில் ஹீனாவைத் தவிர மற்ற வீராங்கனைகள் ஹிஜாப் அணிய ஒத்துக் கொண்டுள்ளதால்,அவர்கள் ஈரானில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார்கள்.

Shooter Heena Sidhu has pulled out of the 9th Asian Airgun Shooting Championships scheduled to be held in December in Tehran stating that she did not like the dress code for women at the event

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>