ஆசியன் சாம்பியன் டிராபி போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
மலேசியாவின், குவாண்டனில் நடந்த ஆசியன் சாம்பியன் டிராபி இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியா அணி பாகிஸ்தானை எதிர் கொண்டது.
மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், இந்திய அணி முதல் பாதி நேரத்தில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. அடுத்த பாதியில் தலா ஒரு கோல் அடித்தது. முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அசத்தலாக வெற்றி பெற்று, கிரிக்கெட் போட்டிக்கு அடுத்து ஹாக்கியிலும் தீபாவளி பரிசை அள்ளியுள்ளது.
Mobile AppDownload Get Updated News