Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

FIFA World Cup ரசிகரா நீங்க? கத்தார் போக ரெடி ஆகிட்டீங்களா? இதோ ஹேப்பி நியூஸ்!

$
0
0

உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் 20ஆம் தேதி கத்தார் நாட்டில் தொடங்குகிறது. சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டிற்கே அதிகளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். எனவே கத்தார் உலகக்கோப்பை போட்டியை காண பலரும் ஆர்வம் காட்டுவர். இதையொட்டி தங்குமிடம், போக்குவரத்து, பாதுகாப்பு, சுகாதாரம் என பல்வேறு வசதிகளை கத்தார் அரசு செய்துள்ளது. இந்த சூழலில் கொரோனா கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படுமா? என்று கால்பந்து ரசிகர்கள் பலரும் சந்தேகம் எழுப்பினர்.

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள கத்தார் அரசு, தங்கள் நாட்டிற்கு வருவதற்கு முன்பாக எந்தவொரு கோவிட் பரிசோதனையும் செய்து கொள்ள தேவையில்லை. மேலும் Ehteraz சுகாதார அப்ளிகேஷனில் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் நீக்குகிறோம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரிதும் குறைந்ததை அடுத்து, இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
95118403

இந்த அறிவிப்பு கத்தார் பயணிக்கும் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை கத்தார் வருகை புரிந்த பின்னர் கொரோனா பாசிடிவ் என்று வந்தால் என்ன செய்வது? என்ற கேள்வி எழலாம். அதற்கு, அந்நாட்டு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த அறிவிப்புகள் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக கத்தார் வருகை புரியும் அனைவரும் Hayya Card விண்ணப்பித்து பெற வேண்டியது அவசியம். உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக பார்வையாளர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து வரவுள்ளதை அடுத்து, கத்தார் நாட்டிற்கான பார்வையாளர்கள் விசா வரும் டிசம்பர் 23ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் கால்பந்து அல்லாத வேறு விஷயங்களுக்காக கத்தார் வர விரும்புவோர் Hayya Card பெற்று வந்தால் அனுமதிக்கப்படுவர். இதுவொரு Fan ID என்பது குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை தொடரின் போது மட்டும் 10 லட்சம் பேர் கத்தார் வந்து செல்வார்கள் என்று அந்நாட்டு அரசு எதிர்பார்க்கிறது.

மெஸ்ஸி சொன்ன அந்த ஒரு வார்த்தை... ஆடிப் போன கால்பந்து உலகம்- அர்ஜெண்டினா நிலை என்ன?

முன்னதாக கத்தார் நாட்டிற்கு வரும் 6 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நெகடிவ் என்று வந்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இல்லையெனில் 24 மணி நேரத்திற்குள் முடிவுகளை தரக்கூடிய ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும். இவற்றை விமான நிலைய கவுண்ட்டரில் உறுதி செய்த பின்னரே கத்தார் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>