Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

செஸ்ஒலிம்பியாட் போட்டியில் வெற்றியை குவிக்கும் இந்திய அணி; மூன்றாவது சுற்றிலும் இந்திய அணி வெற்றி.

$
0
0

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இரண்டாவது சுற்று நடைபெற்று வருகிறது. 3 மணியளவில் தொடங்கிய 2வது சுற்றுக்கான இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 6 அணிகள் களம் இறங்கின. இந்திய அணி சார்பில் விளையாடும் தமிழகத்தை சேர்ந்த 16 வயது இளைஞன் பிரக்ஞானந்தாவிற்கு நேற்று நடந்த முதல் சுற்று போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இரண்டாவது சுற்று போட்டியில் இந்திய ஆடவர் பி பிரிவில் எஸ்டானியா நாட்டை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாடினார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இரண்டாவது சுற்று போட்டியில் விளையாடி வருகின்றனர்.

முதலிடத்தில் இந்திய அணி

நடந்து முடிந்த முதல் சுற்றில் இந்திய அணி முழுமையாக வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்தது. தொடர்ந்து இந்திய அணிக்கான இரண்டாவது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.இரண்டாவது சுற்றிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் தமிழக வீரர்கள் வெற்றி பெற்றனர். இந்திய அணி சார்பில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த 16 வயது இளைஞன் பிரக்ஞானந்தாவிற்கு , முதல் சுற்று போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நடந்த இரண்டாவது சுற்று போட்டியில் இந்திய ஆடவர் பி பிரிவில் எஸ்டானியா நாட்டை எதிர்த்து விளையாடிய பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். இந்திய அணி பி பிரிவில் விளையாடிய மற்றொரு வீரர் அத்திபனும் வெற்றி பெறுள்ளார் .

மூன்றாவது சுற்றிலும் இந்திய அணி வெற்றி

தொடர்ந்து நேற்று நடந்த மூன்றாவது சுற்று போட்டியில் இந்திய அணியின் ஹரி கிருஷ்ணா, மாஸ்ட்ரோவாசிலிஸ் டிமிட்ரியோஸை வென்றார். இந்திய வீரர் விதித் குஜராத்தி, தியோடோரோ நிகோலாஸுடனான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

இந்திய வீரர் சசிகிரண் கிருஷ்ணன், அயோனி டிஸ் எவ்ஜெனியோஸுடன் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் இந்திய ஏ அணி 3-1 என்ற கணக்கில் கிரீஸை தோற்கடித்தது.


இந்திய பி அணி தனது 3-வது சுற்றில் சுவிட்சர்லாந்தை எதிர்த்து விளையாடியது. இந்திய அணியில் டி.குகேஷ், சரின் நிகில்,பிரக்ஞானந்தா, ரவுனக்சத்வானி இடம் பெற்றனர். இதில் வெள்ளை நிறகாய்களுடன் விளையாடிய ரவுனக் சத்வானி 38-வது காய் நகர்த்தலின் போது பென்சிகர் ஃபேபியனை வீழ்த்தினார். பிரக்ஞானந்தா 38-வது நகர்வின்போது, பெல்லடியர் யானிக்கையும் தோற்கடித்தனர். இதன் மூலம் இந்திய பி அணி 4-0 என்ற கணக்கில்சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது.

இந்திய சி அணியானது, ஐஸ்லாந்துடன் மோதியது. எஸ்.பி.சேதுராமன் 36-வதுநகர்த்தலின் போது ஸ்டீபன்சன் ஹான்ஸையும், குப்தா அபிஜீத் 36-வதுநகர்த்தலின் போதுஜர்தான்சன் குட்முண்டூரையும் தோற்கடித் தனர். அபிமன்யு, கிரெடார்சன் ஹெல்டிகிக்கு எதிரான ஆட்டத்தை 75-வது நகர்வில் டிரா செய்தார். இதன் மூலம் இந்திய சி அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் ஐஸ்லாந்தை தோற்கடித்தது.

இந்திய மகளிர் அணி

மகளிர் பிரிவில் இந்திய ஏ அணியானது இங்கிலாந்தை எதிர்கொண்டது. நிறைமாத கர்ப்பிணி யான ஹரிகா, ஹவுஸ்கா ஜோவாங் காவை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 40வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

இந்திய வீரர் பக்தி குல்கர்னி 59வது காய் நகர்த்தலின் போது , கலையழகன் அக்சயாவை தோற்கடித்தார். இதன் மூலம் இந்திய ஏ அணி 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்திய பி அணியானது இந்தோனேஷியாவை எதிர்த்து விளையாடியது. இதில் வந்திகா அகர்வால் 45வது காய் நகர்த்தலின் போது சுகந்தர் ஐரின் கரிஸ்மாவை தோற்கடித்தார்.

மேரி அன் கோம்ஸ்,சித்ரா தேவி அர்தியானி அனஸ்தேசியாவுக்கு எதிரான ஆட்டத்தை 43வது நகர்த்தலின் போது டிரா செய்தார். இதன் மூலம் இந்திய பி அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தியது.

இந்திய சி அணி, ஆஸ்திரி யாவை எதிர்கொண்டது. இதில் ஈஷா கர்வாடே, நெவார்க் கத்தரினாமோதிய ஆட்டம் டிரா ஆனது. சாஹிதி வர்ஷினி 46வது நகர்த்தலின் போது மேர்ஹுபர் நிகோலாவிடம் தோல்வியடைந்தார். பிரதியுஷா போதா, ஹபாலா எலிசபெத்தை வீழ்த்தினார்.

பி.வி.நந்திதா, சியாராவுக்கு எதிராக விளையாடுவதாக இருந் தது. ஆனால் சியாரா கடைசி நேரத்தில் விலகினார். இதனால் நந்திதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி 2.5-1.5 என்ற கணக் கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது.

பிரக்ஞானந்தா வருத்தம்...

இந்திய வீரர் பிரக்ஞானந்தா கூறும்போது, “3-வது சுற்று ஆட்டத்தை நான் சிறப்பாக விளையாடினேன் என கூறமாட்டேன். 25-வது நகர்வின் போது ஆட்டத்தை டிராவில் முடித்துவிடலாம் என்று எண்ணினேன். நடுப்பகுதியிலும் சிறப்பாக செயல்படவில்லை. கடைசியாக எதிரணி வீரரின் கடிகார நேரம் பூஜ்ஜியத்துக்கு வந்துவிட்டது. இதன் காரணமாகவே வெற்றி பெற்றேன். வரும் ஆட்டங்களிலும் தீவிர கவனம் செலுத்துவேன்” என்றார். பயிற்சியாளர் ரமேஷ் கூறும்போது, “பிரக்ஞானந்தா தடுமாறிதான் வெற்றி கண்டார். அவரது ஆட்டத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்போம்.இன்னும் 8 சுற்றுகள் உள்ளன. முடிந்த ஆட்டங்களை பற்றி நினைத்துக்கொண்டே இருக்கக்கூடாது" என்றார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>