Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

‘செஸ் விளையாட்டில்’…ராணிக்கு மட்டும் ஏன் இவ்வளவு அதிகாரம்? விரிவான அலசல்..பழைய வரலாறு!

$
0
0

செஸ் விளையாட்டு 5ஆம் நூற்றாண்டில் இந்தியாவில்தான் தோன்றியது. போர் வரலாறை வைத்துதான் சிப்பாய், யானைப் படை, மந்திரி, ராஜா ஆகிய காய்கள் உருவாக்கப்பட்டது. இருப்பினும் ராணி அப்போது இடம்பெறவில்லை.

காரணம், இந்திய போய் வரலாற்றில் அதிகம் இருந்தது ராஜாக்கள்தான். ஜான்சி ராணி, வேலு நாச்சியார், ருத்ரமா தேவி வரும்வரை, ராணிக்கு போர் களத்தில் வேலையே இல்லாமல்தான் இருந்தது. இதனால்தான், ஜான்சி ராணியின் காலத்திற்கு முன்பு, போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட செஸ் விளையாட்டில் ராணி என்பதே இல்லாமல் இருந்தது.

ராணிக்கு பதில் ஆலோசகர்:

சரி ராணி இல்லை. வேறு எந்த காயை வைத்து விளையாடினார்கள்? என்ற கேள்வி புரிகிறது. அப்போது ராஜாவுக்கு அடுத்த இருந்த ஆலோசகர்தான் ராணியின் இடத்தில் இருந்தார். ராஜாவைப் போல ஒரு இடத்தில் மட்டுமே நகரும் வகையில் ஆலோசகர் காய் இருந்தது. அடுத்து, மந்திரியின் பவரும் ஆலோசகர் காய்க்கு கொடுக்கப்பட்டது. இந்தியர்கள் இந்த விளையாட்டை அப்போது தீவிரமாக விளையாடி வந்திருக்கிறார்கள்.

பெர்சியர்கள் பரப்பினார்கள்:

இந்நிலையில், வணிகம் செய்ய வந்த பெர்சியா, ஆப்கன், ஆரேபியா, ஐரோப்பா, ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் புகழ்பெற்ற இந்த செஸ் விளையாட்டை பார்த்து, விளையாடி பழகி உலகம் முழுவதும் பரபரப்ப ஆரம்பித்தார்கள்.

குறிப்பாக வணிக பெர்சியர்களுக்குத்தான், இந்த செஸை உலகம் முழுவதும் பரபரப்பிய பெருமை சேரும் எனக் கருதப்படுகிறது. ஆம், பெர்சியர்கள் இந்த விளையாட்டை ‘Shah’ என அழைக்கிறார்கள். மேலும், செக் மேட்டை ‘Shah Mat’ என அப்போதே அழைத்திருக்கிறார்கள். இந்த வார்த்தைகள்தான் உருமாறி செஸ் எனவும், செக் மேட் எனவும் பிறகு அழைக்கப்படடதாக என கூறப்படுகிறது.

ஐரோப்பா செய்த மாற்றம்:

இந்த செஸ் போட்டி ஐரோப்பாவுக்குள் சென்ற பிறகுதான் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. காரணம், செஸ் ஐரோப்பாவுக்குள் சென்றபோது அங்கு ராஜாவைவிட ராணிகள்தான் அதிகம் இருந்திருக்கிறார்கள். இந்திய ராஜாக்களை போல, ஆண் பிள்ளை இல்லையென்று வருத்தப்படாமல், ஐரோப்பா மன்னர்கள் பெண்களை ராணியாக அறிவித்திருக்கிறார்கள். அந்த ராணியின் கணவர் ராஜா என அழைக்கப்பட மாட்டார். இளவரசர் என்றுதான் அழைக்கப்படுவார்.

ராணிகள் ஏற்றுக்கொள்ளவில்லை:

உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், இங்கிலாந்து ராணி எலிசபெத் கணவரை நாம் ராஜா என்று அழைப்பதில்லை. இளவரசர் என்றுதான் அழைக்கிறோம். இது அந்த கால வழக்கம்தான். இப்படிப்பட்ட ஐரோப்பாவுக்குள் செஸ் சென்றபோதுதான், ராஜாவுக்கு அடுத்து ராணி இல்லாமல் ஆலோசகர் இருந்ததை ராணிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆலோசகர் என்ற பெயரை ராணி என மாற்றினார்கள். மேலும், ராணிக்குத்தான் முழு பவரும் இருக்க வேண்டும் என்று எண்ணிய அவர்கள் சிப்பாய், குதிரை, யானை, மந்திரி, ராஜா போன்ற அனைவரது பவரும் ராணிக்கு கொடுக்கப்பட்டது. இப்படித்தான், ராணிக்கு பவர் கூடியது. இதனை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

அரபு நாடுகளில் ஆலோசகர்கள்தான்:

அரபு நாடுகள் மட்டும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆலோசகர் என்ற பெயரிலேயே இன்றுவரை விளையாடி வருகிறார்கள். இருப்பினும், ராணிக்கு உள்ள அதிகாரம் ஆலோசகருக்கு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>