வயது வரம்பு கிடையாது
பொதுவாகவே செஸ் போட்டியில் பங்கு பெற வயது ஒரு தடை இல்லை என்று கூறுவார்கள். 50 வயதுக்கு மேல் கூட செஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற வரலாறு உண்டு. 16 வயதே ஆனா தமிழக வீரர் பிரக்ஞானந்தா இந்திய அணிக்காக விளையாடி நேற்று நடந்த போட்யில்வெற்றி பெற்றுள்ளார். 44 வது செஸ் ஓலிம்பியாட் போட்டியில் இளம் வயது சிறுவர்கள் அதிகப்படியாக பங்கு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
8வயது சிறுமி
44 வது செஸ் ஒலிம்பியாட்டில் மிகவும் இளம் வயது வீரர் என்ற பெருமையை பாலஸ்தீன நாட்டை சேர்ந்த 8 வயதான வீராங்கனை செடர் ராண்டா பெற்றுள்ளார். உலகின் 186 நாடுகள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் போன்ற சர்வதேச தொடரில் ஒரு 8 வயது சிறுமி விளையாடுகிறார்என்பது பெருமைக்குரிய விஷயமாகும். போர், தீவிரவாத தாக்குதல் போன்ற சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன நாட்டில் இருந்த 8 வயது சிறுமி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தகுதி பெற்று விளையாடி வருகிறர். செடர் ராண்டாவின் தந்தைக்கு செஸ் பிடித்த காரணத்தால் செஸ்யை கற்றுக்க்கொண்டு சிறப்பாக விளையாடி பல பட்டங்களை வெற்றுள்ளார். செஸ் ஒலிம்பியாட் பாலஸ்தீன் மகளிர் அணியில் இடம்பெற்ற செடர் ராண்டா, தற்போது 2வது சுற்றில் களமிறங்கி தன்னை விட 12 வயது மூத்த வீராங்கனை ஃபஹிமா என்ற வீராங்கனையை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். செட்ர் ராண்டா, களத்தில் இருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு, தனது குறும்பு தனத்தால் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாகவும் மாறியுள்ளார்.
Mobile AppDownload Get Updated News