அதனடிப்படையில் இத்தொடர் குறித்த விழிப்புணர்வை தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பரப்ப முடிவு செய்த தமிழக அரசு சென்னை நேபியர் பாலம், பேருந்துகள், மக்கள் பகுதிகள் மிகுந்த கட்டிடங்கள் போன்ற இடங்களில் இந்த 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஐகான் ‘தம்பி’ சின்னத்தை வரைந்து பிரபலப்படுத்தப்பட்டது.
தம்பி குடும்பம்:
வெள்ளை வேட்டி சட்டையில் குதிரை தலை, இந்த அடையாளத்தைத்தான் ‘தம்பி’ என்று அழைக்கப்படுகிறது. இத்தோடு சேர்த்து நான்கு குதிரை பொம்மைகளை நிரூவி ‘தம்பி குடும்பம்’ என்ற பெயரில் செஸ் விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்திய நிலையில் அது மக்கள் மத்தியில் மிகவும் சுலபமாக பிரபலமடைந்தது.
வெற்றிகரமான விழிப்புணர்வு:
குறிப்பாக தனியார் பள்ளி வாகனங்களிலும் இந்த தம்பி விழிப்புணர்வு செஸ் ஒலிம்பியாட் சின்னம் இடம்பெற்றுள்ளது. அதுவும், மதுரை உசிலம்பட்டி அருகில் கிராமப்புறத்தில் இயங்கி வரும் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாகனத்திலும், போன்ற கிராமப்புற பள்ளி வாகனங்களிலும் இந்த தம்பி ஐகான் இடம்பெற்றுள்ளது. இதனை பார்க்கும் கிராமப்புற மக்கள், ‘இதென்ன வித்தியாசமா இருக்கு?’… எனக் கேள்வி கேட்க, அவர்களுக்குள்ளே ஒருவர், ‘சென்னையில ஏதோ செஸ் போட்டி நடக்குதாம்’ என பதிலளிக்கும் அளவுக்கு இந்த விழிப்புணர்வு பிரசாரம் வெற்றிபெற்றுள்ளது.
விளம்பரப்பட சர்ச்சை:
இதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டத்தில் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் விளம்பர படமும் எடுக்கப்பட்டது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் நடித்திருந்த நிலையில் செஸ்ஸில் பல கிராண்ட் மாஸ்டர் பட்டங்களை வென்ற விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா போன்றவர்களின் படங்கள் இடம்பெறவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விமர்சனங்கள் மிகக்கடுமையாக எழுந்ததால் அந்த விளபம்ரத்தின் இறுதியில் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா போன்றவர்களும் சேர்க்கப்பட்டனர். இதனால் பிரச்சினை ஆப் ஆனது.
துவக்க விழா:
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 44ஆவது செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில், விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் 75 பிரபல நகரங்களை சுற்றிவந்த ஒலிம்பியாட் தீபத்தை முதல்வர் ஸ்டாலிடம் கொடுத்தார். அப்போது மேடையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர், ஆளுநர், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர்களும் இருந்தனர்.
பிரக்ஞானந்தாவுக்கு கௌரவம்:
அப்போது கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் வழங்கிய ஒலிம்பியாட் தீபத்தை முதல்வர் பிரதமரை அழைத்து பகிர்ந்துகொண்டார். பிறகு விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா போன்றவர்களையும் ஸ்டாலின் அழைத்தார். அனைவரும் அந்த தீபத்தை பிடித்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்டாலின்தான் அந்த தீபத்தை ஏற்றிவைத்து, போட்டிகளை துவங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதனை பிரக்ஞானந்தா மற்றும் மற்றொரு இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷிடம் கொடுத்து, தீபத்தை ஏற்றச் சொன்னார்.
Mobile AppDownload Get Updated News