Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

"மசால் தோசை மசால் தோசைதாய்யா.. என்னா ருசி".. விழுந்து விழுந்து சாப்பிடும் செஸ் வீரர்கள்!

$
0
0

செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்னையில் குவிந்துள்ள சர்வதேச செஸ் வீரர்களும், பயிற்சியாளர்களும், நிர்வாகிகளும் தமிழகத்தின் உணவுக்கு படு வேகமாக ரசிகர்களாகி வருகின்றனர்.

தமிழகத்தின் அடையாளமாக உள்ள இட்லி, தோசையை விழுந்து விழுந்து சாப்பிடுகிறார்கள். அதன் சுவையைப் பற்றி சமூக வலைதளங்களில் சிலாகித்துக் கொண்டுள்ளனர். இதுதொடர்பான ஏகப்பட்ட பதிவுகளை டிவிட்டரிலும், பிற சமூக வலைதளப் பக்கங்களிலும் காண முடிகிறது.

44வது செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி இந்த ஒலிம்பியாட் தொடரை தொடங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தலைமையில் நடந்த கோலாகல தொடக்க விழா சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. அத்தனை பிரமாதமாக இந்த விழாவை தமிழகம் வடிவமைத்து அசத்தி விட்டது.


இந்த நிலையில் போட்டித் தொடருக்காக சென்னைக்கு வந்துள்ள சர்வதேச செஸ் வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகளுக்கு தமிழகத்தின் உணவு வகைகள் ரொம்பவே பிடித்துப் போய் விட்டது. இதைப் பற்றி தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் சிலாகித்துப் பேசி வருகின்றனர். இதுவும் வைரலாகி வருகிறது.

93202172

நம்ம ஊரு இட்லி, தேங்காய் சட்னி, சாம்பார், வடை, தோசை, மசால் தோசை ஆகியவை சர்வதேச வீரர்களுக்கு பிடித்து விட்டது. இதை விரும்பி சாப்பிடுவதோடு அதை போட்டோ எடுத்து தங்களது பக்கங்களிலும் போட்டுக் கொண்டுள்ளனர். கீர் வான் டெல் வெல்ட் என்ற ஸ்பெயின் நாட்டு செஸ் நிர்வாகி தனது டிவிட்டரில் தனது அணியோடு சேர்ந்து தோசை, இட்லி வகைகளை ஒரு கை பார்த்து அதைப் பற்றி டிவிட்டரில் சந்தோஷப் பதிவு போட்டுள்ளார். "சென்னை உணவை விரும்பிச் சாப்பிட்டேன். நான் மட்டும் சாப்பிட்டதோடு அல்லாமல், எனத அணியினரையும் இன்று வரவழைத்து அனைவரும் சாப்பிட்டு மகிழ்ந்தோம்" என்று கூறியுள்ளார்.


அதேபோல பிரான்ஸுக்கு அருகே உள்ள ஜெர்சி என்ற சிறிய தீவு நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை லூலா ராப்ஸ் நம்ம ஊரு இட்லி, சாம்பார், சப்பாத்தியை சாப்பிட்டு அதற்கு அடிமையாகி விட்டார். அதையும் அவர் போட்டோ போட்டு இதைத் தவிர வேறு எதை சாப்பிடுவது என்று கேட்டுள்ளார். சென்னையும் அவருக்கு ரொம்பவே பிடித்துப் போய் விட்டதாம். அதுகுறித்தும் நிறைய டிவீட் போட்டுள்ளார்.


சென்னைக்கு விளையாட வந்த சர்வதேச வீரர்கள் சென்னையின் பண்பு, பாரம்பரியம், கலாச்சாரம், உணவு, அன்பு என அனைத்துக்கும் அடிமையாகி ஆச்சரியப்பட்டு போயுள்ளனர். இதுதானே இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தின் சிறப்பே.. அடிமையாகாமல் இருக்க முடியுமா என்ன!

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>