Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

செஸ்ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணி முழுமையாக வெற்றி :சிறப்பாக விளையாடிய தமிழக வீரர்கள்

$
0
0

முதல் முறையாக இந்தியாவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பை தமிழகம் பெற்றிருப்பதால், செஸ் ஒலிம்பியாட்டை உலகமே வியக்குமளவிற்கு நடத்தி அசத்தும் வகையில் தமிழக அரசு மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்று தொடங்கி வைத்தார். போட்டிக்கான சிறப்பு ஏற்பாடுகள் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த முதல் சுற்று போட்டி

முதல் முறையாக இந்தியாவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி , தமிழகத்தில் செஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நேற்று மாலை 3 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் விளையாடிய இந்திய வீரர்கள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இந்திய வீரர்கள் வெற்றி

நேற்று நடந்த முதல் சுற்று இந்திய ஆடவர் அணியின் 'ஏ ' பிரிவு அணி ஜிம்பாப்வேவை எதிர்கொண்டது .இதில் 4-0என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்திய ஆடவர் 'பி' அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்த்து விளையாடியது.இதில் 4-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. ஆடவர் 'பி' அணியில் விளையாடிய, தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் அதிபன் வெற்றி பெற்றுள்ளார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய தமிழக வீரர் அதிபன் 37ஆவது நகர்வில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முகமது சையத்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் ஐக்கிய அமீரக வீரருடன் மோதிய தமிழக வீரர் குகேஷும் வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய ஆண்கள் 'சி' பிரிவு அணி தெற்கு சூடானை எதிர்கொண்டது .இதில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. 'சி' பிரிவில் தெற்கு சூடான் வீரர் அஜக்கை வீழ்த்தி தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய மகளிர் அணி

செஸ்ஓலிம்பியாட் முதல் சுற்றில் இந்திய மகளிர் ஏ அணி தஜிகிஸ்தானை எதிர்கொண்டது.இதில் 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் மகளிர் ஏ பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி வெற்றி பெற்றுள்ளார். 39ஆவது நகர்த்தலில் தஜிகிஸ்தான் வீராங்கனை அப்ரோரோவா சப்ரினாவை வீழ்த்தி வைஷாலி வெற்றி பெற்றார்.

இந்திய மகளிர் அணி 'பி' பிரிவில் , வேல்ஸை எதிர்கொண்டது .இதில் 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது

இந்தியா 'சி' அணி ,ஹாங்காங்கை எதிர்கொண்டது இதில் 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் நேற்று நடந்த செஸ்ஒலிம்பியாட் முதல் சுற்று போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி முழுமையாக வெற்றி பெற்றுள்ளது.


Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>