Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

‘உலக தடகள சாம்பியப்ஷிப்’...இறுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா: 19 வருடங்களுக்கு பிறகு..வரலாறு படைக்க வாய்ப்பு!

$
0
0

உலக தடகள சாம்பியன் சிப் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள ஆரிகானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டில் எட்டி எறிதல் போட்டியில் குரூப் A பிரிவில், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவும், மற்றொரு இந்திய வீரர் ரோகித் யாதவும் கலந்துகொண்டனர்.

முதலில் நடைபெற்ற குரூப் ஏ பிரிவுக்கான ஆட்டத்தில் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா, தனது முதல் முயற்சியிலேயே 89.94 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்தார். இதன்பின்னர் வீசிய 5 வாய்ப்பிலும் குறைந்த தூரமே வீசிய அவர், தனது முதல் வாய்ப்பிலேயே 89.94 மீட்டர் வீசியதால் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார்.

தொடர்ந்து பி பிரிவுக்கு நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீரர் ரோகித் யாதவ் 80.42 மீட்டர் தூரம் வீசி 11ஆவது இடத்தை பிடித்து அவரும் இறுதிசுற்றுக்கு முன்னேறினார். உலக தடகள போட்டி ஈட்டி எரிதலில் இந்திய சார்பில் இரண்டு வீரர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளதால், வரும் ஜூலை 25ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிச் சுற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றுவிட்டால், 19 ஆண்டுகளுக்கு பின் உலக தடகளத்தில் பதக்கம் வென்ற இந்தியர் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துவிடுவார். அதற்கு வாய்ப்பும் பிரகாசமாக இருக்கிறது.

நீரஜ் சோப்ரா பேட்டி:

இறுதிச் சுற்றுக்கு முன்னேறியப் பிறகு பேட்டிகொடுத்த நீரஜ் சோப்ரா, "இது ஒரு நல்ல தொடக்கம். இறுதிப் போட்டியில் எனது 100% பங்களிப்பையும் அளிப்பேன். பார்ப்போம். ஒவ்வொரு நாளும் வித்தியாசமானது. என்னால் முடிந்ததை நான் சிறப்பாக செய்வேன். எந்த நாளில், யார் அதிக தூரம் வீச முடியும் என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது. இன்று ஆறு வீரர்கள் வரை இடி எறிதலில், சிறப்பாக செயல்பட்டனர். எனது முழு பங்களிப்பையும் இறுதி போட்டியில் செலுத்துவேன்" என்று ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>