ஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முன்னேறினார்.
டென்மார்க்கின் ஓடென்ஸில், டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் ரியோ ஒலிம்பிக் நாயகி பி.வி.சிந்து, சீனாவின் ஹீ பிங்ஜாவை எதிர்கொண்டார்.
இதில் துவக்கம் முதல் சிந்து ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை 21-14 என வென்ற சிந்து, இரண்டாவது செட்டை 21-19 என கைப்பற்றினார்.
முடிவில், இந்தியாவின் சிந்து, 21-14, 21-19 என எளிதாக வென்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். இவர் இரண்டாவது சுற்றில், ஜப்பானின் சயாகா சடோவை எதிர்கொள்கிறார்.
Mobile AppDownload Get Updated News