குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உலக கோப்பை கபடி தொடர் நடக்கிறது. இதில், மொத்தம் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது.
தாய்லாந்து வெற்றி :
நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள தாய்லாந்து அணி, ஜப்பான் அணியை எதிர் கொண்டது.
இதன் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் 17-17 என்ற புள்ளிக்கணக்கில் இருந்தது. இரண்டாவது பாதியின் கடைசி நேரத்தில் அதிரடிகாட்டிய தாய்லாந்து அணி 37-33 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதனால், 'பி' பிரிவில் தாய்லாந்து (20), ஈரான் (20) அணிகள் முதல் இரு இடம் பிடித்தன.
அரையிறுதி:
லீக் போட்டிகள் முடிந்த நிலையில் நாளை அரையிறுதி போட்டி நடைபெறுகிறது. இதன் முதல் போட்டியில் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்துள்ள தென் கொரியா ‘பி’ பிரிவில் இரண்டாம் இடம்பிடித்துள்ள ஈரானை சந்திக்கிறது.
2வது போட்டியில் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்துள்ள தாய்லாந்து அணி, ‘ஏ’ பிரிவில் இரண்டாம் இடம்பிடித்துள்ள இந்தியாவை சந்திக்கிறது.
இறுதிப்போட்டி நாளை மறுநாள் நடைப்பெறும்.
Mobile AppDownload Get Updated News