2018 ஆம் ஆண்டு வரை அட்லடிகோ கொல்கட்டா என்று அழைக்கப்பட்ட மோகன் பகான் அணியில் மேலாளராக செயல்பட்டார் 2019ஆம் ஆண்டு அட்லடிகோ கோல்கட்டா அணி மோகன் பகான் என்று பெயர் மாற்றப்பட்டது அப்பொழுதும் அவர் மேலாளராக நீடித்தார். இதுவரை ஏழு ஆண்டுகள் நடைபெற்று முடிந்த இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளில் 3 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார் மேலும் ஒரு முறை இரண்டாம் இடம் பிடித்தார்.
இந்தியன் சூப்பர் லீக் வரலாற்றில் அதிகக் கோப்பைகள் குவித்த மேளாளர் என்ற பெருமை இவரையே சேரும். தடுப்பு ஆட்டத்தையும் தாக்குதல் ஆட்டத்தையும் மிகச்சரியாக கையாளும் இவரது அணிக்கு எதிராக ஆடுவதற்கு எந்த ஒரு அணியும் அஞ்சி நிற்கும்.
இவரது அணியின் ஆட்டம் புயல் வேகத்தில் நகரும், எதிரணியில் யோசிக்க கூட நேரம் கொடுக்காமல் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து எதிரணியினரை பதற்றமடைய செய்து அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பந்தை மீட்பதில் கைதேர்ந்தவர்கள். 2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சீசன் வரை மட்டுமே இவர் மோகன் பகான் அணியோடு ஒப்பந்தமாகியிருந்தார். இவர் நிச்சயம் மோகன் பகான் அணியில் நீடிப்பார் என்று பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில் சிலரோ அதில் சந்தேகம் எழுப்பினர்.
எட்டு ஆண்டுகள் ஒரே அணியில் நீடிப்பது என்பது அலுப்பை கொடுக்கும் என்றும் நிச்சயம் வேறு ஏதோ ஒரு அணிக்கு ஒப்பந்தம் ஆகி விடுவார் என்றும் கருத்து தெரிவித்தனர். ரசிகர்களின் ஐயங்களை போக்கும் வகையில் இன்று அவர் மோகன் பகான் அணியோடு 2022ஆம் ஆண்டு வரை ஒப்பந்தமாகியுள்ளார். இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Mobile AppDownload Get Updated News