இந்திய கால்பந்து வீராங்கனை பூனம் சவுகான் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகினார்.
இந்திய கால்பந்து அணிக்காக விளையாடியவர், பூனம் சவுகான், 29. இவர், தெற்காசிய போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். தவிர உத்திர பிரதேசத அணிக்காக இவர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தற்போது வாரநாசியின் சிக்ரா மைதானத்தில் கால்பந்து பயிற்சியாளராக பணியாற்றி வரும் இவர், கடந்த சில நாட்களாகவெ, டெங்குவால் அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கு, மணிகர்னிக்காவில் இன்று நடக்கவுள்ளது.
Mobile AppDownload Get Updated News