நடக்கவிருக்கும் உலக கோப்பையில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ள ஒரு அணியாக போர்ச்சுகல் அணி விளங்குகிறது. பல்வேறு நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய போர்ச்சுகல் அணி வரவிருக்கும் யூரோ, உலகக் கோப்பை என அனைத்திலும் மிக முக்கியமான பங்காற்றும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த ஆட்டத்தை வெற்றி பெற்று உலகக்கோப்பை தகுதிச்சுற்று வெற்றியுடன் துவங்கும் முனைப்பில் போர்ச்சுகல் அணி களமிறங்கியது.
எதிர்பார்த்ததைப் போலவே ஆட்டம் துவங்கியதிலிருந்து போர்ச்சுகல் அணி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது, இவற்றை செயலிழக்க செய்வதற்காக அசர்பைஜான் அணி கடுமையான தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டது. சற்றும் இடைவேளை விடாமல் போர்ச்சுகல் அணி நடத்திய தொடர் தாக்குதலின் காரணமாக அசர்பைஜான் அணி தடுப்பு ஆட்டத்தை தவிர வேறெதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
போர்ச்சுகல் அணி சார்பாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த அணியினர் கோலை நோக்கி அடித்த பந்துகள் எதுவும் கோலாக மாறவில்லை. போர்ச்சுகல் அணி சார்பாக பெர்னார்டோ, அன்றே, நெவஸ், ரொனால்டோ என மாறி மாறி கோலை நோக்கி பந்தை செலுத்திக் கொண்டே இருந்தனர் ஆனால் அவற்றை அசர்பைஜான் அணியின் கோல்கீப்பர் சிறப்பாக செயல்பட்டு தடுத்ததன் காரணமாக அவர்களுக்கு கோல் எதுவும் கிடைக்கவில்லை.
சிறப்பாக செயல்பட்ட அசர்பைஜான் அணியின் தடுப்பு ஆட்டத்திற்கு ஆட்டத்தின் 37 ஆவது நிமிடத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. போர்ச்சுகல் அணியின் கான்செல்லோ கொடுத்த கிராஸ்சை அணியின் கோல்கீப்பர் சரியாக கிளியர் செய்யாத காரணத்தால் பந்து அசர்பைஜான் அணியின் தடுப்பு ஆட்டக்காரரான மெட்வெடேவ் மேல் பட்டு ஓன் கோலாக மாறியது.
முதல் பாதி முடிவில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் பாதி முழுவதும் அசர்பைஜான் அணி ஒரு முறைகூட கோலை நோக்கி பந்தை அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் பாதியை நிதானமாக துவங்கிய போர்ச்சுகல் அணி அசர்பைஜான் அணியின் தடுப்பு ஆட்டத்தை மீறி பாதிப்புகளை ஏற்படுத்த காத்திருந்தனர். முதல் பாதியை போலவே கடுமையான தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்ட அசர்பைஜான் அணியின் தடுப்பு ஆட்டம் சிறப்பாக செயல்பட்டதால் போர்ச்சுகல் அணி வாய்ப்புகளை ஏற்படுத்த திணறி வந்தனர்.
இரண்டாம் பாதியில் களமிறக்கப்பட்ட புருனோ போர்ச்சுகல் அணிக்கு பலமாக அமைந்தார், ஆனால் அவர் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்புகள் கோலாக மாறவில்லை. ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க அதை புருனோ நிச்சயம் கோலாக மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அடித்த பந்தை அசர்பைஜான் அணியின் கோல்கீப்பர் மகோமெடாலியெவ் பாய்ந்து தடுத்தார்.
இந்த ஆட்டத்தில் அசர்பைஜான் அணி கோல்கீப்பரின் சிறப்பான ஆட்டத்தால் ஆட்டத்தின் இறுதி கட்டங்களில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ மற்றும் ஃபெலிக்ஸ் ஆகியோர் அடித்த பந்துகளையும் தடுத்து இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தனர்.
கடுமையான ஆதிக்கம் செலுத்திய போர்ச்சுகல் அணி கடைசியில் 1-0 என்று ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதன் மூலம் உலகக்கோப்பை தகுதிச்சுற்று வெற்றியுடன் துவங்கியது போர்ச்சுகல் அணி.
Mobile AppDownload Get Updated News