Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஆர்சிச் அட்டகாசமான ஹாட்ரிக்: வெளியேறியது டோட்டன்ஹாம்!

$
0
0


ஐரோப்பிய கண்டத்தில் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் யூரோபா லீக் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் இன்று க்ரோயேசியா நாட்டைச்சேர்ந்த டைனமோ சாக்ரப் அணியும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டோட்டன்ஹாம் அணியும் மோதின.

இரண்டு ஆட்டங்களாக நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் ஆட்டத்தை டோட்டன்ஹாம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இந்த ஆட்டத்தை டோட்டன்ஹாம் அணி ஒரு கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும்.

மறுமுனையில் டைனமோ சாக்ரப் அணி இந்த ஆட்டத்தை குறைந்தபட்சம் மூன்று கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். இதை கருத்தில் கொண்டு காலிறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கியது.

ஆட்டத்தின் தொடக்கம் நிதானமாக அமைந்தது, இரு அணிகளும் ஆட்டத்தை கவனமாக அணுகினர். பெரிய அளவில் தாக்குதல்கள் எதுவும் நடைபெறாததால் ஆட்டம் மந்தமாக சென்றது. டோட்டன்ஹாம் அணி எப்பொழுதும் போல அவர்களுக்கே உரிய பாணியில் கடுமையான தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டது.

டைனமோ சாக்ரப் அணி தாக்குதல் நடத்தும் அந்த சமயத்தில் கவுண்டர் அட்டாக் செய்து கோல் அடித்து விடலாம் என்ற முனைப்பில் டோட்டன்ஹாம் அணி பொறுமை காத்தது. டைனமோ சாக்ரப் தொடர்ந்து தடுப்பு ஆட்டத்தை கடைப்பிடித்தது, ஆனால் கிடைத்த நேரத்தில் எல்லாம் தாக்குதல் நடத்தியது.

டோட்டன்ஹாம் அணி எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் ஆடி வந்தது, ஆனால் அவர்களால் அதிக அளவு வாய்ப்புகளை ஏற்படுத்த இயலவில்லை. டோட்டன்ஹாம் அணி சார்பாக லமேலா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், அவர் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்புகளை டோட்டன்ஹாம் அணியின் வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறினர். இதனால் முதல் பாதி கோல் இன்றி 0-0 என்று முடிந்தது.

இரண்டாம் பாதியை சிறப்பாக துவங்கிய டைனமோ சாக்ரப் அணிக்கு ஆட்டத்தின் 62 வது நிமிடத்தில் ஆர்சிச் பந்தை சுழற்றிவிட்டு கோல் அடித்து முன்னிலை பெறச் செய்தார். தேவையில்லாமல் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு கோல் கொடுக்கும் அபாயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று தடுப்பு ஆட்டத்தில் இறங்கியது.

டோட்டன்ஹாம் அணி, ஆனால் மறுமுனையில் டைனமோ சாக்ரப் அணி நடத்திய தாக்குதல் காரணமாக ஆட்டத்தின் 82 ஆவது நிமிடத்தில் ஆர்சிச் மீண்டும் ஒரு கோல் அடித்து டைனமோ சாக்ரப் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெறச் செய்தார். இரு ஆட்டங்களையும் சேர்த்து 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிரா ஆனது.

வெற்றியாளர் யார் என்பதை நிர்ணயிக்க கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் கொடுக்கப்பட்ட 30 நிமிடங்கள் 2 பாதிகளாக நடைபெறும். கூடுதல் நேரத்தின் முதல் பாதி மந்தமாகவே சென்றது.

டைனமோ சாக்ரப் அணி நடத்திய தாக்குதல்கள் எதுவும் டோட்டன்ஹாம் அணியின் தடுப்பு ஆட்டத்தை மீறி கோலாக மாறவில்லை. கூடுதல் நேரத்தில் இரண்டாவது பாதியின் முதல் நிமிடத்திலேயே டைனமோ சாக்ரப் அணியின் ஆர்சிச் கோல் அடித்து தனது ஹாட்ரிக்கை நிறைவு செய்தது மட்டுமல்லாமல் டைனமோ சாக்ரப் அணியை முன்னிலை பெறச் செய்தார்.

டோட்டன்ஹாம் அணி வெளியேறும் ஆபத்து ஏற்பட்டதை உணர்ந்தபின் தங்களால் இயன்ற அளவு தாக்குதல் நடத்தினர் ஆனால் அவர்களுக்கு கடைசிவரை கோல் எதுவும் கிடைக்காத காரணத்தால் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தனர்.

முதல் ஆட்டத்தில் 2-0 என்று தோல்வியடைந்த டைனமோ சாக்ரப் அணி இரண்டாம் ஆட்டத்தை 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது இதன் மூலம் இந்தச் சுற்றை 3-2 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>