Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

மந்தமான ஆட்டத்தின் இறுதிகட்டத்தில் கோல் அடித்து மோகன் பேகன் வெற்றி

$
0
0

இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் 94வது ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மோகன் பேகன் அணியும், ஆறாவது இடத்தில் இருக்கும் ஜாம்ஷெட்பூர் அணியும் மோதின. இவ்விரு அணிகள் மோதிய முதல் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மோகன் பேகன் அணியினர் சமீபகாலமாக அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதன் விளைவாக கடந்த மூன்று ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக அணியின் கேப்டன் ராய் கிருஷ்ணா கடந்த நான்கு ஆட்டங்களாக தொடர்ந்து கோல் பதிவு செய்து வருகிறார். மறுமுனையில் ஜாம்ஷெட்பூர் அணி பெரிய அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் தடுப்பு ஆட்டத்தில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எஞ்சியிருக்கும் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். எனவே இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு களமிறங்கினர். மோகன் பேகன் அணியினரும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிப்பார்கள்.

80923870

ஆட்டத்தை இரு அணியினரும் நிதானமாக கையாண்டார்கள், துவக்கத்திலிருந்தே ஆட்டம் மந்தமாக சென்றது, ஜாம்ஷெட்பூர் அணியின் தடுப்பு ஆட்டம் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் மோகன் பேகன் அணியினர் பெரிய அளவில் தாக்குதல் நடத்த இயலவில்லை. மோகன் பேகன் அணியினரும் ஜாம்ஷெட்பூர் அணி கவுண்டர் அட்டாக் செய்யாமல் இருப்பதற்கு சற்று கவனமாகவே ஆட்டத்தை கையாண்டார்கள். மோகன் பேகன் அணி சார்பாக வில்லியம்ஸ் மற்றும் மார்செலினோ ஆகியோர் கோலை நோக்கி பந்தை அடிக்க அவர்களுக்கும் கோல் எதுவும் கிடைக்கவில்லை, மறுமுனையில் ஜாம்ஷெட்பூர் அணி சார்பாக எவரும் தாக்குதல் நடத்தவில்லை. முதல் பாதியின் முடிவில் இரு அணியினரும் கோல் எதுவும் பதிவு செய்யாமல் டிராவில் முடித்தனர்.

இரண்டாம் பாதியும் முதல் பாதியை போலவே மந்தமாக துவங்கியது. இரு அணியினரும் தாக்குதலில் ஈடுபடாமல் ஆட்டத்தை மெதுவாக அணுகினர். இரண்டாம் பாதியின் முதல் 15 நிமிடங்கள் மந்தமாக சென்றது. அதன்பின் இருவரும் சற்று தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட தொடங்கினர். குறிப்பாக மோகன் பேகன் அணி சார்பாக மண்விர் சிங், மார்செலினோ, ராய் கிருஷ்ணா, ஹெர்னான்டஸ் என கோல் அடிப்பதற்கு பலரும் முனைப்பு காட்டினர், அதுபோல ஜாம்ஷெட்பூர் அணி சார்பாக வல்ஸ்கிஸ் மாத்திரம் மோகன் பேகன் அணியின் கோல்கீப்பரை சோதித்தார். ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் மோகன் பேகன் அணியின் கேப்டன் கிருஷ்ணா ஒரு கோல் அடித்து மோகன் அணியை வெற்றி பெறச் செய்தார். ராய் கிருஷ்ணா அடித்த அந்த கோல் மூலம் அவர் நடப்பு சீசனில் தனது 13வது கோலை பதிவு செய்தார். மேலும் தொடர்ச்சியாக ஐந்தாவது ஆட்டத்தில் கோல் அடித்து அசத்தினார்.

80924122

ஜாம்ஷெட்பூர் அணி இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்ததன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பறிபோனது. மறுமுனையில் மோகன் பேகன் அணியினர் இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>