சீனாவின் ஷாங்காய் மாஸ்டர் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதன் ஆண்களுக்கான ஒற்றையர் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் மூன்று முறை ஷாங்காய் மாஸ்டர் கோப்பையை வென்ற செர்பியாவின் நோவக் ஜொகோவிக், ஸ்பெயின் வீரர் ரோபர்டோ படிஸ்டாவை எதிர் கொண்டார்.
பரபரப்பாக நடந்த இப்போட்டியில் ஜொகோவிக் 6-4,-6-4 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். பொதுவாக சாந்தமாக காட்சியளிக்கும் ஜொகோவிக் இப்போட்டியின் போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்.
போட்டியின் போது அவர் செய்த தவறுகளால் மிகவும் கடுப்படைந்தார். முதல் செட் தோல்வி அடைந்த போது, தனது பேட்டை தரையில் அடித்து உடைத்தார். அதேபோல் இரண்டாவது செட்டின் போது ஏற்பட்ட தவறினால் அவரது டி-சர்ட்டை கிழித்துக் கொண்டார்.
அவர் அடிக்கடி செய்த சிறுசிறு தவறுகளால் ஒவ்வொரு புள்ளியை பெறுவதில் சிறமம் ஏற்பட்டது. அதோடு அடிக்கடி மைதானத்தில் உள்ள அம்பயரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டவல் வைத்திருக்கும் சிறுவனிடமும் அதை படக் என பிடிங்கி கோபத்தை வெளிப்படுத்தினார்.
Mobile AppDownload Get Updated News