பீஜிங் (2008), லண்டன்(2012), ரியோ (2016) என தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் 100 மீ., 200 மீ., 4*100 மீ., ஒட்டங்களில் ஹாட்ரிக்கில் ஹாட்ரிக் தங்கம் வென்று தடகளத்தில் அசைக்க முடியாத ஜாம்பவானாக முத்திரை பதித்தவர் ஜமைக்காவின் மின்னல் மனிதன் உசைன் போல்ட்.
இவர் ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பின் தனது ஓய்வு குறித்து ஏற்கனவே போல்ட் அறிவித்திருந்தார். அவர் வரும் ஆகஸ்ட் 5-13ல் லண்டனில் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப்புடன் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தனது சொந்த ஊரில் கடைசியாக பங்கேற்பது குறித்து போல்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போல்ட் கூறியது:
ஜமைக்காவில் வரும் ஜீன் 10ல் நடக்கவுள்ள ரேசர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் தொடர் தான் நான் ஜமைக்காவில் பங்கேற்கும் இறுதி போட்டி. இதன்பின் உள்ளூரில் நான் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை. தவிர, ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் தொடருடன் முழுவதுமாக தடகளத்தில் இருந்து ஓய்வு பெறுவேன்.
இவ்வாறு போல்ட் கூறினார்.
Mobile AppDownload Get Updated News