Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

பார்சிலோனா அணியில் மீண்டும் மெஸ்ஸி: ரசிகர்கள் கொண்டாட்டம்!

$
0
0

பார்சிலோனா அணி நாளை ரேயோ வோல்கானோ அணியுடன் மோதுகிறது, இதை முன்னிட்டு இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் பார்சிலோனா அணியின் மேலாளர் கோமனுக்கு பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக மெஸ்ஸியின் நிலைமையைப் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் மெஸ்ஸி விளையாடுவதில் ஆர்வமாக இருக்கிறார் என்றும் அவரைப் போன்ற வீரர்கள் அனைத்து ஆட்டத்திலும் விளையாட வேண்டும் என்று விரும்புவார்கள் என்றும் கூறியிருந்தார்.

மேலும் அணியின் தடுப்பு ஆட்டக்காரரான டெஸ்ட் இன்னும் காயத்திலிருந்து மீண்டு வராத காரணத்தால் நாளை அவர் அணியில் இடம்பெற மாட்டார் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ரேயோ வோல்கானோ இரண்டாம் நிலை அணியாக இருந்தாலும், முதல் நிலை அணியை போல கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும் என்று கூறினார், மேலும் அவர்களை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது தங்களுக்கு முதல் நோக்கமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

கடந்த இரு ஆட்டங்களில் களம் இறங்காத மெஸ்ஸி மீண்டும் அணியில் இடம் பெற்றிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரில்லாமல் இரு ஆட்டங்களிலும் பார்சிலோனா அணி வெற்றி பெற்ற போதிலும் ஆட்டத்தில் போதிய வேகம் இல்லாத காரணத்தால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

80468454

எனவே இப்பொழுது மெஸ்ஸியின் வருகை அணிக்கு பெரும் பலமாக அமைகிறது. ஸ்பானிஷ் கால்பந்தில் இதர பெரும் அணிகளான ரியல்மாட்ரிட் மற்றும் அட்லடிகோ மாட்ரிட் கோப்பையிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து பார்சிலோனா அணி இந்த கோப்பையை வெல்வதற்கு இது அருமையான வாய்ப்பாக அமைகிறது.

ஐந்து நிமிடத்தில் மூன்று கோல்: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது டோட்டன்ஹாம்!

ஆண்டுதோறும் கோப்பைகளை வெல்லும் பார்சிலோனா அணி சென்ற ஆண்டு எந்த ஒரு கோப்பையும் வெல்லாது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் நாளை நடைபெறும் ஆட்டம் பார்சிலோனா அணியின் நடப்பு சீசனில் வெற்றியை நிர்ணயம் செய்யக்கூடிய ஒரு ஆட்டமாக அமைகிறது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>