Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

டிராவில் முடிந்த மும்பை, சென்னை ஆட்டம்: செய்த தவறுக்கு தக்க தண்டனை!

$
0
0

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 71வது ஆட்டத்தில் மும்பை அணியும் சென்னை அணியும் மோதின. இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் சென்னை அணி தாக்குதல் ஆட்டத்தில் சிறப்பாக ஈடுபட்ட போதும், மும்பை அணியின் தடுப்பு ஆட்டத்தை மீறி ஒரே ஒரு கோல் மட்டும் பதிவு செய்திருந்தது. நடப்பு சீசனில் முதலாம் ஆட்டத்தில் தோல்வி அடைந்த மும்பை அணி தொடர்ச்சியாக 11 ஆட்டத்தில் தோல்வி அடையாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறது.

மறுமுனையில் சென்னை அணி சென்ற வாரம் மோகன் பேகன் அணியிடம் தோல்வியுற்று ஆறாவது இடத்தில் தவித்து வருகிறது, இந்த ஆட்டத்தை வெல்லும் பட்சத்தில் நான்காம் இடத்திற்கு முன்னேறி விடும். இதனால் வெற்றியை மனதில் கொண்டு களமிறங்கியது சென்னை அணி. நிதானமான ஆட்டத்தை ஆடி கவுண்டர் அட்டாக் கோல் அடிப்பதில் மும்பை அணி கைதேர்ந்தது. சென்னை அணியினர் பந்தை மும்பை அணியினருக்கு தராமல் ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முற்பட்டது.

80453395
80462521

இருப்பினும் மும்பை அணியினர் தங்களது நிதான ஆட்டத்தின் மூலம் தாக்குதல் நடத்தியது துல்லியமாக இருந்தது. மும்பை அணியினர் செய்த பாஸ் ஒவ்வொன்றும் தெளிவாகவும் துல்லியமாகவும் அமைந்தது. மறுமுனையில் சென்னை அணியினர் பந்தை தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொண்டாலும் அவர்கள் செய்த பாஸ் மற்றும் அவர்கள் உருவாக்கிய வாய்ப்புகள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதன் விளைவாக ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் பிப்பின் சிங் கொடுத்த கிராஸ்ஸை ஒக்பேசி தலையால் முட்டி கோல் அடிக்க மும்பை முன்னிலை பெற்றது. பொதுவாக முன்னிலை பெற்றதும் மும்பை அணி தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடும், அதைப் போலவே இந்த ஆட்டத்திலும் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடத் தொடங்கியது, இதனால் சென்னை அணி பெரிய அளவில் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியாமல் போக முதல் பாதி 1-0 என்ற கோல் கணக்கில் முடிவுற்றது.
80462530

இரண்டாம் பாதியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய சென்னை அணியினருக்கு மும்பை அணியின் தடுப்பு ஆட்டத்தை மீறி பெரிய அளவில் வாய்ப்புகள் ஏற்படுத்த முடியவில்லை. மும்பை அணி சிறப்பான முறையில் தடுப்பு ஆட்டத்தை செயல்படுத்த மும்பை அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்நேரத்தில் மும்பை அணியின் தடுப்பாட்ட வீரரான அஹமத் ஜாஹு செய்த தவறின் காரணமாக சென்னை அணியினருக்கு ஒரு பெனால்டி கிடைத்தது.

80452397

அதை துல்லியமாக கோலாக மாற்றினார் சென்னை அணியின் எஸ்மாயில். 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவை நோக்கி சென்றது, ஆனால் சென்னை அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டது. ஆனால் இறுதி வரையில் கோல் எதுவும் கிடைக்காமல் டிராவில் முடிந்தது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் ஸ்பாட்டிற்கு முன்னேறும் வாய்ப்பை நழுவ விட்டது. மும்பை அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>