2016ம் ஆண்டிற்கான ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர், கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் நேற்றைய ஆட்டத்தில் சென்னை, கோவா அணிகள் மோதின. இந்தப் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. தொடக்கத்தில் கோவா அணி அதிரடியாக விளையாடியது.
ஆனால் ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் சென்னை அணியின் முல்தர் கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து வாடோ 26வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்தார். இதையடுத்து 2-0 என சென்னை அணி முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் கோவா அணி எவ்வளவோ முயன்றும் கோல் ஏதும் போடவில்லை. இறுதியில் சென்னை அணி 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை அணி, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
Mehrajuddin Wadoo and Hans Mulder were the goalscorers as Chennaiyin FC recorded their first victory of the season.
Mobile AppDownload Get Updated News