Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

கால்பந்து ஜாம்பவானுக்கு இன்று ஹேப்பி பர்த்டே - மெஸ்ஸி கடந்து வந்த பாதை இதோ!

$
0
0

லியோனல் மெஸ்ஸி இன்று தனது 33ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். புரட்சியாளர் சே குவேரா பிறந்த ரொசாரியோ நகரத்தில் பிறந்த லியோனல் மெஸ்ஸிக்கு 13 வயதிலேயே கால்பந்து மீது ஈர்ப்பு ஏற்பட்டது. தனிச்சிறப்பு மிக்க ஆட்டத்தால் உலகின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவராகத் திகழ்கிறார். உலகின் முதல்நிலை கால்பந்து வீரராக இருக்கும் இவர் பல்வேறு உலக சாதனைகளைப் படைத்துள்ளார். மெஸ்ஸி இளம் வயதில் ஹார்மோன் குறைபாடு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். பார்சிலோனா அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பின், இவரின் சிகிச்சைக்கு அந்த வணி நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொண்டது.

பார்சிலோனா அணிக்காக முதன்முறையாக 2003ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி களமிறங்கினார். அங்கீகரிக்கப்படாத நட்பு ரீதியிலான போட்டியில் எஃப் சி போர்டோ அணிக்கு எதிராக விளையாடினார். அதன்பின் 2004ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி மெஸ்ஸி பங்கேற்ற முதல் அங்கீகரிக்கப்பட்ட போட்டியில் எஸ்பன்யோல் அணிக்கு எதிராகக் களமிறங்கினார்.

ஒலிம்பிக் தினம்: கொண்டாட்டத்தை இல்லாமலாக்கிய கொரோனா!

அப்போட்டியில் பார்சிலோனா அணி 1-0 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. 2014ஆம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்கிற வரலாற்றுச் சாதனையைத் தன்வசம் வைத்துள்ளார். ஒருமுறை அர்ஜென்டினா அணிக்காக விளையாடிய போது களமிறங்கிய 42 வினாடிகளில் நடுவரால் ரெட் கார்ட் காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து ஸ்பெயின் அணிக்காக மெஸ்ஸி ஒப்பந்தம் செய்யப்பட உள்ளார் என்கிற தகவல் பரவியது. ஆனால், மெஸ்ஸி அந்த தகவல் உண்மையல்ல என்று மறுத்திருந்தார். 2012ஆம் ஆண்டு மெஸ்ஸியின் புகழ் உச்சிக்குச் சென்றது. பார்சிலோனா அணிக்காக 2012ஆம் ஆண்டில் 79 கோல்களையும், அதே ஆண்டில் அர்ஜென்டினா அணிக்காக 12 கோல்களையும் அடித்து ஒரே ஆண்டில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்கிற உலக சாதனையைப் படைத்தார்.

ஆறு முறை புகழ்பெற்ற பலூன் டி’ஓர் விருதை வென்றுள்ளார். கால்பந்து உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ’ஐரோப்பாவின் தங்கக் காலணி’ விருதை 6 முறை வென்றுள்ளார். 2009-10, 2011-12, 2012-13, 2016-17, 2017-18, 2018-19 ஆகிய ஆண்டுகளில் இவ்விருதை வென்றுள்ளார். பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் அவர் தங்கம் வென்றுள்ளார்.

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரருக்கு கொரோனா: ரசிகர்கள் அதிர்ச்சி!!

மெஸ்ஸி கால்பந்து உலகில் மட்டுமல்ல தன்னார்வப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய நிர்வாகியாகவும் இவர் செயல்படுகிறார். லியோ மெஸ்ஸி அறக்கட்டளை மூலம் ஏழைகள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். வசதியற்ற ஏழ்மை நிலையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் இன்று மெஸ்ஸியின் இலவசப் பள்ளிக் கூடங்களில் பயின்று வருகிறார்கள்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


”சின்னம்மா”வுக்கு போட்டியாக ”ஜூனியர் அம்மா” உருவாகிறாரா ?


திருச்சி அன்னை ஆசிரமத்தில் … …


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 877 - தாவர விதி!


ஆசீர்வாத மந்திரங்கள்


குரு நித்யா எனக்கு யார்?


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


திருமூலர் அருளிய உயிர்காக்கும் ரகசிய மந்திரம்


வேலூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு முலாம் பழம் கிலோ ரூ.30 க்கு விற்பனை


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>