Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரருக்கு கொரோனா: ரசிகர்கள் அதிர்ச்சி!!

$
0
0

சர்வதேச டென்னிஸ் உலகில் நம்பர் ஒன் வீரராக இருப்பவர் செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச். அவருக்கு தற்போது கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜோக்கோவிச் கூறும்போது, "செர்பியாவின் தலைநகர் பெல்கிரேட் நகரத்தை அடைந்ததும் நாங்கள் கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டோம். அதில் எனக்கும், என் மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக எனது குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை..

என் மூலம் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன். அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். அனைவரும் விரைவில் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வருவோம் என நம்புகிறேன்.

ஒலிம்பிக் தினம்: கொண்டாட்டத்தை இல்லாமலாக்கிய கொரோனா!

14 நாட்கள் எங்களை மருத்துவ குழுவினர் தனிமைப்படுத்திக் கண்காணிப்பார்கள்.அதன்பின், ஐந்து நாட்கள் கழித்து எங்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

பில்கிரேட் நகரத்திற்கு சென்றபின் ஜோக்கோவிச் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்துள்ளார். பயிற்சியின் போது சகவீரர்களைக் கட்டித் தழுவியுள்ளார். பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

மாற்றியமைக்கப்பட்ட ஃபார்முலா-1 கார்பந்தய அட்டவணை!

சக வீரர்களுடன் இரவு நேரத்தில் கேளிக்கை விடுதி உட்பட பல்வேறு இடங்களுக்குச் சென்றிருக்கிறார். அப்போது, வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதனால், சக வீரர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. அவருடன் தொடர்பிலிருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

போட்டிகள் ரத்து: ஜோக்கோவிச் கொரோனா கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, ஜூலை 3, 4 ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>