Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

கொரோனா: இத்தாலியில் விளையாட்டு போட்டிகளுக்குத் தடை!

$
0
0

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இத்தாலி நாட்டில் இப்பாதிப்பு அதிகமாவதை தொடர்ந்து அனைத்து வகைப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இத்தாலி நாட்டின் பிரதமர் கோஸ்பி கண்டி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இத்தாலியில் நடைபெறும் கால்பந்து போட்டிகள் உட்பட அனைத்து போட்டிகளும் ஏப்ரல் 3ஆம் தேதிவரை ஒத்தி வைக்கப்படும்” என்று அறிவித்தார்.

தற்போது அங்கு ‘சீரிஸ் ஏ’ கால் பந்து லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடைசியாக சாஸ்ஸோலோ அணி ப்ரேசியா அணியை 3-0 என்கிற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. இப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில் முதல் கோல் அடித்திருந்த சாஸ்ஸோலோ அணி வீரர் ப்ரான்சிசோ கப்டோ, “நிலைமை சீரடையும், அதுவரை வீட்டிலேயே இருங்கள்” என்கிற வாசகத்தை கோல் அடித்தப்பின் கேமரா முன் மக்களுக்காகக் காட்டினார்.

கொரோனா வைரஸ் எவ்வாறு தாக்குகிறது? ஆய்வில் தகவல்!

கொரோனா வைரஸ் இத்தாலியில் தீவிரமாகப் பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 4600க்கும் மேற்பட்டோர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது, 460க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்குக் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

“நாட்டில் இவ்வளவு பெரிய அசாதாரண சூழ்நிலை நிலவும் போது விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. கால் பந்து சாம்பியன் லீக் போட்டிகளையும் சேர்த்துத் தான் குறிப்பிடுகிறேன். விளையாட்டு போட்டிகள் மூலம் வைரஸ் பரவும் சூழல் உள்ளது. ஆகையால், விளையாட்டுப் போட்டிகளை அனுமதிக்க முடியாது” என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இத்தாலி நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் வென்ஜின்ஜோ ஸ்படஃபோரா கூறும்போது, “கால் பந்து போட்டிகளை இப்போதைக்குப் பொதுமக்கள் நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. கொரோனா வைரஸை கட்டுக்குள் வைப்பதற்கு இது பெரிதும் உதவும்” என்றார்.

கொரோனா: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47ஆக உயர்வு!

பல்வேறு இத்தாலி விளையாட்டு அமைப்புகள், குளிர்கால போட்டிகள், நீச்சல் போட்டிகள், கைப்பந்து போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகளை ஒத்தி வைப்பதாகத் நேற்று அறிவித்தது. இத்தாலியின் புகழ்பெற்ற விளையாட்டுப் போட்டியான சீரிஸ் ஏ கால் பந்து போட்டியில் இதுவரை 38 போட்டிகளில் 26 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. எட்டுமுறை சாம்பியன் பட்டம் வென்ற ஜுவென்டொஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ஒரு புள்ளி பின்தங்கி லஜியோ அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. இண்டர் மில்லன் அணி 9 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஏப்ரல் மூன்று வரை இப்போட்டிகள் அனைத்தும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் கால் பந்து ரசிகர்கள் போட்டிகள் எப்போது ஆரம்பிக்கும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில், மிரட்டும் கொரோனாவை எப்படி எதிர்கொள்வது என அச்சத்திலும் உள்ளனர்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles